அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி,சோனிட்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: இந்தியாவை அவதூறு செய்ய வேண்டும் என சதி செய்பவர்கள், இந்திய தேயிலையையும் விட்டு விடாமல் அவதூறு செய்யும் அளவுக்கு தாழ்ந்திருக்கிறார்கள். இந்த சதி செய்பவர்கள், இந்திய தேயிலைக்கு , உலகம் முழுவதும் அவதூறு ஏற்படுத்த வேண்டும் என உறுதி ஏற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதை நீங்கள் படித்திருப்பீர்கள்.
தேயிலையை வைத்து, இந்தியாவின் நற்பெயரை கெடுக்க சில வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டு வருவதற்கான, ஆவணங்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை நீங்கள் ஏற்கிறீர்களா? அதனை தொடர்புடைய மக்களை நீங்கள் ஏற்று கொள்வீர்களா? அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை நீங்கள் ஏற்கிறீர்களா? வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. அதில், அசாம் மக்கிய பங்கு வகிக்கிறது. கூட்டு முயற்சி எப்படி பலன் தரும் என்பதற்கு அசாம் முக்கிய உதாரணம்.
கடந்த 2016 வரை அசாமில் 6 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 5 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடக்கிறது. அசாமில், தேவையை கருத்தில் கொண்டு மேலும் , 2 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.