உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 153-க்கும் மேற்பட்டோா் நிலை குறித்துத் தெரியவில்லை; இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டன; 27 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.