சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் அவருக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலா வருகையை மிகவும் பெரிதுபடுத்தி காட்டாத வகையில் எடப்பாடி பழினசாமி மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால், அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.