Type Here to Get Search Results !

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் புதிய மின்சார கார்

 


ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான ஹூன்டாயுடன் இணைந்து இந்த புதிய மின்சார காரை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை ஆப்பிள் நிறுவன ஆய்வாளர் இன்ஜிகோ உறுதி செய்துள்ளார்.

இ-ஜிஎம்பி என்ற அதிநவீன தொழில் நுட்பத்தில் அயோனிக் 5 என்ற மின்சார காரினை ஹூன்டாய் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தொழில் நுடபம் ஆப்பிள் நிறுவன காரிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மின்சார காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 483 கி.மீ., வரை பயணிக்கலாம் என்று ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி மூலம் 18 நிமிட நேரத்தில் 80 சதவீத சார்ஜினை எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்ட முடியும் எனவும், அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.