சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சகோதரர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 3 வருடங்களாக பாதை மாறாமல் மக்கள் நீதி மய்யம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் 3வது அணி எப்போதும் வென்றதாக சரித்திரமே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அண்டு சன்ஸ் காங்கிரசில் வந்து சேருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர்.
வெல்லாத கட்சியை எதற்காக அப்படி அழைக்க வேண்டும்? அது மட்டுமின்றி இல்லதரசிகளுக்கு ஊதியம் என்பதை நாங்கள்தான் அறிவித்தோம்.
தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எங்களின் 7 உறுதி மொழிகளை காப்பி அடித்துள்ளார் என்று கமல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.