இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.
ஒரே நாளில் 2,17,113 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டியது. 26.82 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,92,311 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 83.05 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.13 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 15.82 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.