நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தொற்று நோய் தடுப்பு, பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.