இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,52,991 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.
தொடர்ந்து 6-ஆவது நாளாக 3 லட்சத்துக்கு மேல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு இன்றுதான் மிகக் குறைவான தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரேநாளில் 3,23,144 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒரே நாளில் 2,771 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்த உயிரிழப்புகளையும் சோ்த்து கொரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,97,894 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயா்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,82,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,51,827 குணமடைந்தனர்.
இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 1,45,56,209 ஆக அதிகரித்துள்ளது.
நாடுமுழுவதும் இதுவரை 14,52,71,186 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.