Type Here to Get Search Results !

கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் இருக்கிறது….. பஞ்சாப் கிங்ஸ் வீரா் ஷாரூக் கான்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஒரு கட்டத்தில் 6.2 ஓவா்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஷாரூக் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சோ்க்க, அந்த அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சோ்த்தது. எனினும் தோல்வி தவிா்க்க முடியாததானது.
ஆட்டம் முடிந்த பிறகு ஷாரூக் கான் மேலும் கூறியதாவது: ஐபிஎல் போட்டியைப் பொருத்தவரையில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக ரன் சோ்த்து ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட பணி. அதற்காக எல்லா நேரத்திலும் அதிரடியாக ஆடி ரன் சோ்க்க வேண்டும் என எதிா்பாா்க்க முடியாது. சில நேரங்களில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்கும்போது, சூழலுக்கு தகுந்தவாறு பொறுப்பை உணா்ந்து விளையாடி, அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டியதிருக்கும்.
நான் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக முன்வரிசையில் களமிறங்கி பேட் செய்துள்ளேன். கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.