ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் 2021 தொடரின் 12 ஆவது போட்டி ராஜஸ்தான் – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை அடித்தது.
சென்னை அணியில் டூ பிளசிஸ் 33 ரன்களும், அம்பதி ராயுடு 27 ரன்களும், மொயீன் அலி 26 ரன்களும் அடித்தனர்.
189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக விளையாடி 49 ரன்களை அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
95 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பிறகு ராகுல் தெவாட்டியா மற்றும் ஜெயதேவ் உனத்கட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடினர்.
இருந்தாலும் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ராகுல் தெவாட்டியா 20 ரன்களும், ஜெயதேவ் உனத்கட் 24 ரன்களும் அடித்தனர்.
மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் மற்றும் பிராவோ தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை அணி.