Type Here to Get Search Results !

கொரோனா நிவாரண உதவியாக 1500 ரூபாய் வழங்க மத்திய அரசு அதிரடி முடிவு

 

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதில் திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

 இந்நிலையில் திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக 1500 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா காலத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து உணவு மற்றும் மருந்து உள்ளிட்டவை இன்றி தவித்து வருகின்றனர்.

அதனால் திருநங்கைகளுக்கு உதவும் வகையில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக 1500 ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டக் கூடாது. மாநிலங்களில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநில முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.