Type Here to Get Search Results !

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் 2000 ரூபாய்

 

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதிக்கும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் முதல் தவணை 2 ஆயிரம் நிவாரணம் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.