Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,11,170 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து ஞாயிற்றுக்ககிழமை சற்று குறைந்திருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொரோனாவால் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இரு தினங்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 3,11,170-ஆகவும், இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 36,18,458 பேராகவும் குறைந்துள்ளது. 
ஒரே நாளில் கொரோனா தொற்றால் 4,077  போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,70,284-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.46 கோடி (2,46,84,077) ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,07,95,335-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,62,437 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 15 -ஆம் தேதி வரை 31,48,50,143 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை ஒரேநாளில் 18,32,950 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் இதுவரை 18,22,20,164 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.