Type Here to Get Search Results !

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது…. அதிரடி அறிவிப்பு

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் ரூ.2,900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்கால அரசின் செலவினங்களில் ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அரசுக்கு டாஸ்மாக் மதுபான விலையை ஏற்றுவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.