அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய புதிய தலைமுறை அக்னி பி இன்டர் கான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணை இன்று காலை 10:55 மணிக்கு ஒரிசாவின் பாலசோர் அருகே டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
கிழக்கு கடற்கரையில் அமைக்கப்பட்ட பல்வேறு தொலைத்தொடர்பு மற்றும் ரேடார் நிலையங்களால் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. ஏவுகணை சுற்றுப்பாதையில் பயணித்து இலக்கை மிக துல்லியமாக அடைந்தது. இந்த சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மேற்கொண்டது.
அக்னி பி ஏவுகணை அடுத்த தலைமுறை மேம்பட்ட வகை அக்னி ஏவுகணை ஆகும். ‘இந்த ஏவுகணை 1000 முதல் 2000 கி.மீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.’