இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,039 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,07,77,284-ஆக அதிகரித்தது.
கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,62,631-ஆக அதிகரித்தது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 110 போ் உயிரிழந்தனா். 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று 110 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,596-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 15-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது.
நாடு முழுவதும் 1,60,057 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.49 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.84 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 7,21,121 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.