Type Here to Get Search Results !

இந்தியாவில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா உறுதி

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,08,80,603-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 87 போ் உயிரிழந்தனா்.

தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 100-க்குக் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,447-ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,05,89,230 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,35,926 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

சுமாா் 3 வாரங்கங்களுக்கு மேலாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 75,05,010 -ஆக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.