Type Here to Get Search Results !

தலிபான் - பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 26 பேர் பலி

 


ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 10 தலிபான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 26 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.