தமிழகத்தில் இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,38, 842 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,363 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,21,947 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 4,532 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
The post தமிழகத்தில் சிகிச்சையில் 4,532 ஆக குறைவு…. இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா…. appeared first on தமிழ் செய்தி.