பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.
முன்னதாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகும்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருததப்பட்டிருந்தது சர்ச்சையானது.
இதுகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.