சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். தற்போது அவர் சென்னை புறப்பட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சசிகலா கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்த தடை!
இந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் 1500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அமமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து விடுவதை தடுக்கவே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜூஜூவாடியில் 5000 பேர் திரண்டு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.