Type Here to Get Search Results !

சசிகலா கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்த தமிழக காவல்துறை தடை

 


ஊழல் குற்றிவாளி சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கொரோனாவுக்கு சிகிச்சையையும் முடித்துக் கொண்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து சசிகலா இன்று காலை தமிழகத்திலிருந்து சென்னை திரும்புகிறார்.

சசிகலா வருகை தரும் கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை கட்டக் கூடாது என தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. சசிகலா செல்லும் காரை பின்தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புறப்படும் சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பண்ணை வீட்டிற்கு அருகே 150 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொண்டர்கள் 6 அடி உயர வேல் மற்றும் திருப்பதி பிரசாதத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி விதித்த கட்டுப்பாடுகள் அந்த மாவட்ட நிர்வாகிகளுக்குத்தான் பொருந்தும். சசிகலா சென்னை வருகையின்போது கட்டுப்பாடுகள் குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. சட்டத்திற்கு உள்பட்டு மக்களுக்கு இடையூறின்றி சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பார்கள் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.