தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. ஆனால், நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் கட்சியைக் கூட்டணிக்கு கொண்டு சென்றுவிட்டனர். எனக்கும் சரி, கேப்டனுக்கும் சரி கூட்டணியில் உடன்பாடு இல்லை. தமிழில் பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு' என்று கேப்டன் கூறுவார். எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி'.
தலைவர் கேப்டன் முதல்வராக வேண்டும். நாம் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல, தனியாக களம் காண முடியும் என்று ஏற்கெனவே நிரூபித்தவர்கள். கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கிறார்கள். எனவே, நாம் யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார். இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.