Type Here to Get Search Results !

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு

 


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்த மண்ணையும், மக்களையும், மொழியையும்  காக்கவே நாம் களமிறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடை இல்லை நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் அணிதிரள வேண்டும். 

மக்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம் சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடைசூழ பிப்ரவரி 21 ஆம் தேதி சென்னை நோக்கி அலை அலையாய் திரண்டு வாருங்கள். 

பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வழிதோடும் அரசியல், வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்குத் தொடக்க உரையை சேர்ந்து எழுதுவோம் என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஊர் கூடி தேர் இழுந்தால், நாளை நமதே. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.