Type Here to Get Search Results !

சசிகலாவின் கார் விபத்தில் சிக்கியது... தொடர்ந்து முன்னேறி வரும் பயணம்..!

 


சசிகலா வந்த கார் திடீரென விபத்து ஒன்றில் சிக்கி கொண்டது.. தொண்டர்கள் ஆர்வ கோளாறினால் இப்படி சிறு விபத்துக்கள் வழியில் ஏற்பட்டாலும், தொடர்ந்து முன்னேறி வருகிறது சசிகலாவின் கார்..!

இன்று காலையில் இருந்தே தமிழகம் ஒருவித பரபரப்பில் உள்ளது.. அமமுக குஷியில் உள்ளனர்.. அதிமுக டென்ஷனில் உள்ளது.. திமுக நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது..!

சசிகலா தமிழகம் வருகிறார் என கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டது. அவரை 500 முதல் 1000 கார்கள் பின்தொடரும் என அமமுகவினர் பிதற்றி வந்தனர். 

ஆனால், மிகக்குறைந்த அளவிலான கார்கள் மட்டுமே அவரை தற்போது பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் அள்ளும் என கூறப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதல் லெகேசனிலே வெறும் 200-250 பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் பாதி பேர் பத்திரிக்கையாளர்களே. சிறையில் இருந்து தண்டனை அனுபவித்து வெளியில் வரும் சசிகலா என்ன தியாகியா..? அவருக்கு ஏன் இவ்வளவு பிடப் கொடுக்கிறார்கள் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சசிகலாவை வரவேற்பதற்காக வந்த கார்களில், இரண்டு கார்களில் தீப்பற்றியது. கார் முழுக்க பட்டாசு இருந்ததால் பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பற்றி கார் முழுக்க தீ பரவியது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.