இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து அரசுத்தரப்பு உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னை டிடிகே சாலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஞாயிறு மாலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா திங்களன்று சென்னை வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது