Type Here to Get Search Results !

உத்தரகண்டில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி... பிரதமர் நரேந்திர மோடி

 


உத்தரகண்டின் சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே ரிஷி கங்கா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பனிப் பாறை உடைந்து விழுந்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 150 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது உத்தரகண்ட் நிலவரம் பற்றி அவர் கூறியது:

"இன்று கங்கை நதியின் ஒருபுறத்திலிருந்து நான் பேசும்போது, உத்தரகண்டில் அதன் தொடக்கத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களுடைய மனதைரியத்துக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். அந்த மாநில முதல்வருடன் பேசினேன். அங்குள்ளவர்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கிறேன். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன."

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.