பாஜக இளைஞரணியில் தாத்தாக்கள் இருக்க முடியாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இனி இடம்; தாத்தாக்கள் இருக்க முடியாது. இனி 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாஜக இளைஞரணி பொறுப்புகளில் இடம்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.