Type Here to Get Search Results !

ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுப்பணித்துறை தடை

 


சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த 27-ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும்  அறிவுத்திறன் பூங்கா பகுதிகளில் இறுதிக்கட்ட கட்டடப் பணிகள் நடைபெறுவதால் பாரவையாளர்களுக்கு தடை விதிக்கப்டுவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.