Type Here to Get Search Results !

Breaking News… மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும்…. முதல்வர் அதிரடி

 

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம், செவிலியர்களுக்கு 20000, இதர பணியாளர்களுக்கு 20 ஆயிரம், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20000,கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.