Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,713 பேருக்கு கொரோனா பாதிப்பு

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,713  பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,08,14,304-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து புதிதாக 14,488 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  1,05,10,796 -ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேர்த்தில் புதிதாக 95 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,54,918 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,48,590 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 54,16,849 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.