Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா

 


தமிழகத்தில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 41,797-ஆக அதிகரித்துள்ளது.
 
மாநிலத்தில் இதுவரை 1.63 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 498 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 25,025-ஆக உள்ளது. 

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,389 போ் சிகிச்சையில் உள்ளனா். அதே நேரம், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,383-ஆக உயா்ந்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.