Type Here to Get Search Results !

ஜெயலலிதாவின் பிறந்தாளான இம்மாதம் 24ம் தேதியில்.... எடப்பாடியார் சசிகலாவுக்கு வைத்த அதிரடி வேட்டு...

 


வேலூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடியார், "அதிமுகவைப் பின்னடைய செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் அதில் ஒருவர். 10 ஆண்டு காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியே வெச்சிருந்தாங்க. அம்மா மறைவுக்கு பிறகு அவர் கட்சியில சேர்ந்துக்கிட்டதா அவரே அறிவிச்சுக்கிட்டாரு. அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுமாங்க? எங்க கட்சி எம்எல்ஏக்கள் 18 பேரை பிடிச்சிக்கிட்டுப் போயிட்டாரு. அந்த 18 பேரையும் நடுரோட்டுலயும் விட்டுட்டுப் போயிட்டாரு. அவரை நம்பி போனவங்க எல்லாம் நடுரோட்டுலதான் நிக்கணும். இப்படி ஏதாவது செய்து, அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுறதுக்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக்கிட்டிருக்காங்க. அதை அதிமுக முறியடிக்கும். சில சதிகாரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்கு பின்னிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சதி வலையை சின்னபின்னாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம்"என்றார்.

ஆனாலும் எந்தச் சூழலிலும் அதிமுகவை சார்ந்தவர்கள் சசிகலா பக்கம் சென்று விடக்கூடாது என்பதில் படு எச்சரிக்கையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக சில அதிரடி திட்டங்களை கையிடுத்து இருக்கிறார் அவர். அதாவது தற்போது கட்சியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை முற்றிலுமாக தன் வசப்படுத்துவது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஜெயலலிதாவின் பிறந்தாளான இம்மாதம் 24ம் தேதி 50 முக்கிய வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த ஐம்பது பேர் கொண்ட பட்டியலில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கி இருக்கும். இப்படி முன்பே அவர்களை வேட்பாளர்களாக அறிவித்தால் அவர்கள் சசிகலா பின்னால் போவதை தடுக்க முடியும் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.