மதுரை மேல மாசி வீதியில் பழமையான குடியிருப்பு கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கட்டடச் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சிக்கியுள்ளதாகவும், அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
The post மதுரை வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி appeared first on தமிழ் செய்தி.