Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா துடங்கியாது…!

தமிழகத்தில் இன்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும். தமிழகத்தில் இன்று(ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தினசரி 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1,900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4,328 மையங்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.